சிங்கப்பூர் சட்டங்களை இலங்கையில் அறிமுகப்படுத்த வேண்டும் - சஜித்
முன்னைய ஆட்சியின் உறுப்பினராக இருந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தடுக்க முடியாமல் போனதற்கு அவர்கள் பொறுப்பை ஏற்கத்தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தாக்குதலுக்குப் பின்னால் இருந்த உண்மையான குற்றவாளிகளை அடையாளம் காண முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கான உண்மையான வெளிப்படையான விசாரணை நடைபெற வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்து செயற்பட்ட உண்மையான குற்றவாளிகள் தற்சமயம் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள் என்பது மக்களின் பார்வையாகும்.
பயங்கரவாதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்கள் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதே தமது கட்சியின் நிலைப்பாடாகும்.
இது நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் மூலம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.சிங்கப்பூரில் ஏன் பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் இல்லை என்பதை இலங்கை கண்டறிய வேண்டும். அங்குள்ள சட்டங்களை இலங்கையில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று சஜித் வலியுறுத்தியுள்ளார்.
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri
சன் டிவி மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா Cineulagam
கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri