உலுக்குளம் காட்டுப்பகுதியில் கசிப்பு தயாரிப்பு நிலையம் முற்றுகை
வவுனியா, உலுக்குளம் காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் ஒன்று இன்று பொலிசாரால் முற்றுகையிப்பட்டதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா, உலுக்குளம் காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, செட்டிகுளம் பகுதி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் செனவிரட்ன வீரக்கோன் அவர்கள் தலைமையில், உலுக்குளம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போது கசிப்பு தயாரிப்பதற்கு பயன்படும் நான்கு பெரல்கள், 100 லீற்றர் கோடா, வயர்கள் என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணையின் பின் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உலுக்குளம் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.







பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு விழுந்த பேரிடி... இந்தியாவால் கடும் பாதிப்பில் காரீஃப் பயிர்கள் News Lankasri

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam
