சிபெட்கோ எரிபொருள் நிலையங்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
சிபெட்கோ எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக எரிபொருள் விநியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த சங்கம் வெளியிட்டுள்ள தகவலில் மேலும், தற்போது பெட்ரோல் நிலையங்களுக்கு வழங்க வேண்டிய தரகு பணத்தில் 35 சதவீதத்தை பராமரிப்பு கட்டணமாக வசூலிக்க மீண்டும் கூட்டுத்தாபனம் தயாராகி உள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோக இடைநிறுத்தம்
குறித்த பணத்தை டிசம்பர் 25ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறும், அவ்வாறு வழங்கப்படாவிடின் எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்த நேரிடும் எனவும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. தற்போது 238 சிபெட்கோ எரிபொருள் நிலையங்கள் இயங்கி வருகின்றன.
அந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களுக்கு தற்போது 2.75 சதவீத தரகு பணம் கிடைக்கின்றது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தற்போது வழங்கப்படும் தரகு தொகையில் 0.25 சதவீதத்தை மாதாந்திர பயன்பாட்டு கட்டணமாக கூட்டுத்தாபனம் வசூலிக்கிறது.

பயங்கரவாத தடைச் சட்ட கைது விவகாரம்: ஆச்சரியம் அடைந்த ஜனாதிபதி- சாணக்கியன் வெளிப்படுத்திய தகவல் (Video)
இந்த நிலையில் மேலும் ஒரு மாதாந்திர பயன்பாட்டுக் கட்டணத்தை அறவிடுவது நியாயமற்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு: உடலை பரிசோதித்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
