திடீரென 2000 ரூபாவாக அதிகரித்த புளியின் விலை! வியாபாரிகள் கொடுக்கும் விளக்கம்
ஹட்டனில் ஒரு கிலோ புளி 2000 ரூபாவுக்கு சில்லறை விலையில் விற்பனை செய்ய வேண்டியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தையில் புளிக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாகவே இவ்வாறு விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
புளிக்கான அறுவடை
வழக்கமாக ஒரு கிலோ புளி, அதிகபட்ச சில்லறை விலையாக ரூபா 350 முதல் 400 இற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படும்.

ஆனால் நேற்று(12) ஒரு கிலோ புளி, 2,000 ரூபாவுக்கு சில்லறை விலையில் விற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த நாட்களில் புளிய மரங்களில் அறுவடை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மார்ச் மாத இறுதியில் புளிக்கான அறுவடை முடியும் வரை இந்த பற்றாக்குறை தொடரும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜேர்மனியில் வாகன சோதனையின்போது தப்பியோட முயன்ற பிரித்தானியர்: அவரது சூட்கேஸிலிருந்த பொருள் News Lankasri
குணசேகரன் ஜாமினுக்கு வந்த சிக்கல், செக் வைத்தது யார் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam