ஆசிரியர் நியமனங்களில் தொடர் சர்ச்சை: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
மேல்மாகாணத்திற்கு நியமிக்கப்பட்ட 2200 ஆசிரியர் நியமனங்கள் முறைப்படி நியமிக்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்(Joseph Stalin) குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
''அடுத்த பாடசாலை தவணை ஆரம்பிக்கும் போது மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்படும்.
40,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை
நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் தற்போது சுமார் 40,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. மேல் மாகாணத்தில் சுமார் 7000 ஆசிரியர்களும், வடமத்திய மாகாணத்தில் 3800 பேரும், கிழக்கு மாகாணத்தில் 3698 பேரும், தென் மாகாணத்தில் 3199 பேரும் மத்திய மாகாணத்தில் 6200 ஆசிரியர்களும் பற்றாக்குறையாக உள்ளனர்.

மேல்மாகாணத்திற்கு இரண்டு நியமன வைபவங்களில் சேர்த்துக் கொள்ளப்பட்ட சுமார் 2200 பேர் இதுவரை முறைப்படி நியமிக்கப்படவில்லை.
அரசு செலவை குறைக்க ஆசிரியர்களுக்கான உரிய நியமனம் தாமதமாகி வருகிறது.
இந்நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய பாடசாலைகளுக்கு இடமாற்ற விண்ணப்பங்களை வழங்குவதற்கு புதிய ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan