பொருளாதார மீட்சிக்காக குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்களை செயற்படுத்த வேண்டும்: மகிந்த ராஜபக்ச

Mahinda Rajapaksa Sri Lanka Politician Government Of Sri Lanka Sri Lanka Budget 2023
By Sachi Nov 22, 2022 08:08 AM GMT
Report

பொருளாதார மீட்சிக்காக குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்களை செயற்படுத்த வேண்டும், பூகோள பொருளாதாரம் மற்றும் அரசியல் நடப்பு நிலவரங்களை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (22.11.2022) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் போது இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், சிறந்த திட்டங்களுக்கு அமைய செயற்பட்டால் மாத்திரமே எதிர்காலத்தை சுபீட்சமானதாக நிலைப்படுத்திக் கொள்ள முடியும்.

பொருளாதார மீட்சிக்காக குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்களை செயற்படுத்த வேண்டும்: மகிந்த ராஜபக்ச | Short Long Programs Implemented Economic Recovery

நல்லாட்சி அரசாங்கம் 

ஆகவே திருத்தங்களுக்கு அமைய அனைவரும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பொருளாதார பாதிப்புக்கு யார் காரணம் என குறிப்பிடுபவர்கள் குறுகிய நிலைக்குள் இருந்துக் கொண்டு செயற்படாமல் கடந்த காலங்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சியமைத்த நல்லாட்சி அரசாங்கம் குறுகிய காலத்தில் அதிக வெளிநாட்டு கடன்களை பெற்றது. தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு கடன் பெற்றுக் கொண்டது.

இது நாடாளுமன்றமும், நாட்டு மக்களும் அறியாத விடயமல்ல,பொருளாதார பாதிப்புக்கு தற்போது தீர்வு காண ஆலோசனை குறிப்பிடுபவர்கள் நல்லாட்சி அரசாங்கத்தில் முக்கிய பதவிகளில் இருந்ததை மறந்து விட்டார்கள்.

மக்கள் எதிர்கொண்ட நெருக்கடி

சவால்களை பொறுப்பேற்குமாறு குறிப்பிடும் போது அதனை ஏற்க மறுத்தவர்கள் விமர்சனங்களை மாத்திரம் முன்வைக்கிறார்கள்.

வீரவசனம் குறிப்பிடுபவர்களால் எவ்வித பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது, எம்மால் வீரவசனம் மாத்திரம் பேசிக் கொண்டு இருக்க முடியாது. சவால்களை பொறுப்பேற்பது எமது கொள்கையாகும்,சவால்களை கண்டு ஒருபோதும் அஞ்சு ஓடவில்லை.

பொருளாதார மீட்சிக்காக குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்களை செயற்படுத்த வேண்டும்: மகிந்த ராஜபக்ச | Short Long Programs Implemented Economic Recovery

கடன் சுமையால் நெருக்கடியாகிய நாட்டையே பொறுப்பேற்றோம். நாட்டை முன்னேற்ற பாதையில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம், ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல், கோவிட் பெருந்தொற்று தாக்கம் ஆகியவற்றை கடினமான முறையில் முகாமைத்துவம் செய்தோம்.

மக்கள் எதிர்கொண்ட நெருக்கடியை ஒரு தரப்பினர் தமது அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டார்கள்,ஆகவே நாட்டு மக்களை குறை கூற முடியாது.

தவறான தீர்மானங்கள் தொடர்பில் தற்போது அவதானம் செலுத்துவதால் பயன் ஏதும் கிடைக்கப் பெறாது.அரசாங்கத்தின் நாளாந்த செயற்பாடுகளையும் நிறைவேற்ற அரசாங்கம் கடன் பெறும் நிலை ஏற்பட்டது.பெற்றுக் கொண்ட கடன் அரசாங்கத்தின் ஸ்தீரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தி,ஆட்சி மாற்றம் வரை கொண்டு சென்றது.

அரச கடன்களை மறுசீரமைத்து வரவு செலவு திட்டத்தின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்துக் கொள்ள வேண்டும். நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைத்து வெளிநாட்டு கையிருப்பை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு நிவாரணம் வழங்க வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் கண்ணீர், துயரத்தை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொள்வதை அரசியல் தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்நிலையில் விவசாயத்துறையை மேம்படுத்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளின் கருத்துகளுக்கு செவிசாய்த்து செயற்பட்டால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

பொருளாதார பாதிப்புக்களுக்கு மத்தியில் தேசிய வளங்களை விற்கும் கொள்கை எமக்கு கிடையாது. வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு ஏன் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

நாட்டின் பாதுகாப்பு அனைத்து துறைகளுக்கும் செல்வாக்கு செலுத்தும்.தேசிய பொருளாதாரம் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது.

பொருளாதார மீட்சிக்காக குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்களை செயற்படுத்த வேண்டும்: மகிந்த ராஜபக்ச | Short Long Programs Implemented Economic Recovery

சுகாதாரம்,கல்வி ஆகிய துறைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஆட்சிக்கு வரும் அனைத்து அரசாங்கங்களும் கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டில் கடந்த மாதங்களில் காணப்பட்ட நெருக்கடியை தீவிரப்படுத்தியது யார் என்பதை நாட்டு மக்கள் தற்போது அறிந்துக் கொண்டுள்ளார்கள்.

எதிர்வரும் காலங்களில் மக்கள் பல விடயங்களை அறிந்துக் கொள்வார்கள்.நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைவதை தடுக்கும் தேசிய மற்றும் சர்வதேச சக்திகளின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்கள் இதனை நன்கு அறிவார்கள் அவர்களுக்கு வெட்கமில்லை. மீண்டும் எம்மை எவ்வாறு வீழ்த்துவது என்பது குறித்து அவதானம் செலுத்தியுள்ளார்கள்.

பொருளாதார மீட்சிக்காக குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்களை செயற்படுத்த வேண்டும்: மகிந்த ராஜபக்ச | Short Long Programs Implemented Economic Recovery

அரசியல் நோக்கத்திற்காக முரண்பட்டுக் கொள்ளாமல் அரசாங்கம் மாறும் போது மாற்றமடையாத அரச கொள்கையை செயற்படுத்துவது அவசியமாகும்.

விமர்சனங்களை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருந்தால் கொள்கையற்ற நாடு மாத்திரமே மிகுதியாகும். நாட்டில் சர்வதேசத்தின் தலையீடு தீவிரமடைந்துள்ளது. அவர்களின் நோக்கமே கடந்த மாதங்களில் செயற்படுத்தப்பட்டன. திட்டமிட்ட வகையில் பொருளாதாரம் வீழ்த்தப்பட்டது.

நாட்டில் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர் காணப்பட்ட நிலைக்கும்,தற்போதைய நிலைக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

ஒரு தரப்பினர் பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தும் வகையில் செயற்படுகிறார்கள். சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் பொருளாதார பாதிப்பில் இருந்து மீளும் வகையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, நாட்டு மக்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் அமைய பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
கண்ணீர் அஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US