சொந்த ஊரில் சுமந்திரனுக்கு காத்திருந்த பெரும் அதிர்ச்சி...
தமிழர் பகுதிகளில் வெளியான உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளை உற்று நோக்கும் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தமிழரசு கட்சியை பின்னுக்கு தள்ளி பல இடங்களில் வெற்றிப்பெற்றதை காணக்கூடியதாக இருந்தது.
இந்தநிலையில் சுமந்திரன் யாழ்.மாவட்டத்தை கையாண்ட விதத்தில் இந்த தேர்தல் முடிவுகள் அமைந்ததாக கனடா அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித் அவர்,
“கிளிநொச்சி மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் சிறீதரன் தன்னுடைய ஆளுமையால் கடந்த முறையையும் விட சிறப்பான தேர்தல் முடிவுகளை நோக்கி எடுத்துச்சென்றுள்ளார் என்றே கூற முடியும்.
இதேவேளை சுமந்திரனுடைய ஆதரவாளர் என்று கூறப்படும் சத்தியலிங்கத்தை முதன்மைப்படுத்திய வவுனியா மாநகர சபையில் வட்டாரங்களை கூட வெல்ல முடியாத நிலையில் தமிழரசுகட்சி தள்ளப்பட்டுள்ளது.
இது சத்தியலிங்கத்திற்கு எதிரான விசனம் மட்டுமல்ல, சுமந்திரனை ஒத்து செல்வதற்கான ஒரு வெளிப்பாடும் தான்” என சுட்டிக்காட்டினார்.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Super Singer: பாடிக் கொண்டிருக்கும் போதே நடுவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! ஃபைனலிஸ்ட்டாக சென்றவர் யார்? Manithan

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி News Lankasri

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri
