நடைபயணமாக அழைத்து வரும் ஷிரான் பாசிக்கின் உயிருக்கு ஆபத்து! நீதிமன்றம் பொலிஸாருக்கு பிறப்பித்த உத்தரவு
போதைப்பொருள் கடத்தலில் கோட் பாதர் என போற்றப்பட்ட ஷிரான் பாசிக் டுபாயில் இருந்து அனுப்பப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு 90 நாள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதன்படி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
அந்த வகையில் ஷிரான் பாசிக் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கஞ்சிப்பானி இம்ரான் கைதுச் செய்தி! ஊடங்களுக்கு வெளியிட முடியாத இரகசிய நகர்வு - அமைச்சரின் முக்கிய அறிவிப்பு
நீதிபதி பிறப்பித்த உத்தரவு
ஷிரான் பாசிக்கின் சட்டத்தரணி வசந்த பிடிகல நீதிமன்றில் இவ்வாறு கூறியுள்ளார், தனது கட்சிக்காரர் தினமும் காலையில் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்திலிருந்து மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொலிஸார் நடைபயணமாக அழைத்துச் செல்வதாகத் தெரிவித்தார்.
இந்நிலைமை மிகவும் ஆபத்தானது. இதனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் உடனடியாக அவருக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இதற்கமைய, கொழும்பு மேலதிக நீதவான் அசங்க போதரமக உடனடியாக பொலிஸாருக்கு உத்தரவிட்டு, ஷிரான் பாசிக்கின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பணித்தார்.

ஏனெனில் அவரது பாதுகாப்புக்கான முழுப் பொறுப்பும் பொலிஸாரையே சாரும். இதனால் நாரஹேன்பிட்டி பொலிஸாருக்கும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கும் இந்த நபரின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஏனெனில்,ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கொல்லப்பட்டால் அது மிகவும் தீவிரமான பிரச்சினையாகிவிடும். இவர் ஈடுபட்டுள்ள கடத்தல் சம்பவங்களுக்குப் பின்னால் பல தரப்பினர் தொடர்பில் உள்ளனர்.
இவருக்குப் பின்னால் அல்ல, இவர்களுக்கு மேலிருந்து இயங்குபவர்கள் 'வெள்ளைக் கொலர்' குற்றவாளிகள் என்றே சமூகத்தில் பார்க்கப்படுகிறார்கள்.
அறக்கட்டளைகளை நடத்தும் பல்வேறு அரசசார்பற்ற நிறுவனங்களில் உள்ள, கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும், அரசியலுடன் தொடர்புடைய, கலைத் துறையுடன் தொடர்புடைய, ஊடகத் துறையுடன் தொடர்புடைய சமூகத்தில் நல்ல முகத்தைக் காட்டும் பலரே இத்தகைய கடத்தல்களில் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கி வருகின்றனர்.
எனவே, அவர்களை அடையாளம் காண்பதற்கான வாய்ப்பு மிக விரைவில் அழிக்கப்படும் சூழல் உள்ளது.
உயிருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து
மாகந்துரே மதுஷ் உதாரணத்தை எடுத்துக்கொண்டால், அவர் அரசியல்வாதிகள் உட்பட பலரின் பெயர்களை வெளிப்படுத்தத் தயாராக இருந்ததாகக் கூறப்பட்டது.
ஆனால் அந்தத் தகவல்களுக்கு என்ன நடந்தது என எவருக்கும் தெரியாது. இவ்வாறான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் தனியாகச் செயற்பட முடியாது.

இவர்கள் இந்த நாட்டில் செயற்பட வேண்டுமாயின் பொலிஸாரின் பாதுகாப்புத் தேவைப்படுகிறது. பாதுகாப்புப் படைகளின் பாதுகாப்புத் தேவைப்படுகிறது.
அரசியல்வாதிகளின் பாதுகாப்பும் ஆசீர்வாதமும் தேவைப்படுகிறது.சில மதஸ்தானங்களின் பாதுகாப்பும் இவர்களுக்கு கிடைத்துள்ளது.
எனவே, மேல்மட்டத்தில் உள்ள இவர்கள் தம்மைப் பற்றிய தகவல்கள் வெளியாகிவிடும் என்ற பயத்தில் இவ்வாறான சந்தர்ப்பங்களில் இந்த நபர்களை அழித்துவிட உடனடியாகச் செயற்படுகிறார்கள்.
தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள பாசிக் தொடர்பிலும் இவ்வாறானதொரு ஆபத்தான நிலைமை காணப்படலாம். பொலிஸார் குறிப்பிடுவது போல் இவர் அனைவரையும் விட சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஆவார்.
இந்த விடயத்தை கருத்தில் கொண்டே நீதவான் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கும் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கும் இவரது பாதுகாப்பு தொடர்பில் மிகுந்த பொறுப்புடன் செயற்படுமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
செவ்வாய் - சனி கேந்திர யோகம்: செப்டம்பர் மாதத்தின் முதல் நாளே அதிர்ஷ்ட யோகம் பெறும் ராசிகள்! Manithan