காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு தங்கம் கடத்த முயற்சி - சிக்கிய 26 பயணிகள்
புதிய இணைப்பு
காங்கேசன்துறை ஊடாக நாகபட்டினம் செல்ல தயாரான சமயம் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட 26 பயணிகளும் தங்கம் கடத்துவதாக எழுந்த சந்தேகத்தின் பெயரில் ஸ்கானிங் பரிசோதணைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறையில் இருந்து இன்று(17.06.2026) நாகபட்டினம் பயணிக்கவிருந்த 26 பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
நாகபட்டினம் காங்கேசன்துறை இடையே இடம்பெறும் சிவகங்கை பயணிகள் கப்பல் சேவையில் இன்று காலை நாகைபட்டினத்தில் இருந்து 117 பயணிகள் காங்கேசன்துறையை வந்தடைந்தனர்.
இவ்வாறு வந்த கப்பலில் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து 146 பயணிகள் நாகைபட்டினம் பயணிக்க காங்கேசன்துறை துறைமுகத்தில் காத்திருந்தனர்.
இவ்வாறு காத்திருந்த 146 பயணிகளில் 26 பேரை பயணிக் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் அனுமதிக்காது தடுத்து வைக்கப்பட்டனர். தடுத்து வைக்கப்பட்ட 26 பேரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைக்காகவே தற்போது போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து இன்று(17.06.2026) இந்தியா - நாகப்பட்டினம் நோக்கிப் பயணிக்கவிருந்த பயணிகளில் 26 பேர் கடைசி நேரத்தில் சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த 26 பயணிகளையும் அவசர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கத் திணைக்கள அதிகாரிகள் பரிசோதனை
இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினம் ஆகிய நகரங்களுக்கு இடையே தற்போது 'சிவகங்கை' பயணிகள் கப்பல் சேவை இடம்பெற்று வருகிறது.

இதற்கமைய, இன்று காலை நாகப்பட்டினத்தில் இருந்து 117 பயணிகளுடன் புறப்பட்ட இக்கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து, காங்கேசன்துறையில் இருந்து மீண்டும் இந்தியா நோக்கிப் பயணிப்பதற்காக 146 பயணிகள் துறைமுகத்தில் தயாராகக் காத்திருந்துள்ளனர்.
இவ்வாறு காத்திருந்த 146 பயணிகளின் ஆவணங்கள் மற்றும் உடமைகளைச் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் பரிசோதனைக்கு உட்படுத்திய போதே, சந்தேகத்தின் பேரில் 26 பயணிகளைக் கப்பலில் பயணிக்க அனுமதிக்காது அதிகாரிகள் திடீரெனத் தடுத்து வைத்துள்ளனர்.
அவர்கள் எதற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் மற்றும் என்ன காரணத்துக்காக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள் என்பது குறித்த மேலதிக விவரங்கள் இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. இந்தச் சம்பவம் காரணமாகக் காங்கேசன்துறை துறைமுக வளாகத்தில் இன்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குற்றமற்றவர் என்றால் கைதைத் தடுத்து நீதிமன்றம் ஓட வேண்டிய அவசியம் ஏன்! கோட்டாபய விவகாரத்தில் ஆளும் கட்சி கேள்வி
மேலதிக தகவல் - ராகேஷ்



முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri