வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஈடுபடும் ஸார்ப்(Photos)
வடபகுதியில் பதினெட்டு இலட்சத்து எழுபத்தினான்காயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தேழு சதுரமீற்றர் பரப்பளவில் (1874987) இருந்து முப்பத்திரண்டாயிரத்து இருநூற்று எண்பத்திரண்டு (32282) அபாயகரமான வெடிபொருட்களை இதுவரை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.
இன்று (25) மேற்படி கண்ணிவெடி அகற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனமான ஸார்ப் நிறுவனம் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் நிறுவனம் ஒரு அரச சார்பற்ற நிறுவனமாகும்.
இது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2022 ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும்; கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலை மற்றும் ஆனையிறவிலும் தனது பணியை முன்னெடுத்தது.
இதன்போது பதினெட்டு இலட்சத்து எழுபத்தினான்காயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தேழு சதுரமீற்றர் பரப்பளவில் (174987) இருந்து முப்பத்திரண்டாயிரத்து இருநூற்று எண்பத்திரண்டு (32282) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளது.
அத்தோடு கிளிநொச்சி பிரதேச வைத்தியசாலையில் ஜனவரி மாதம்; 13ஆம் திகதி இரத்ததானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது
என்றும் அவ்வறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது
தொடர்ந்து இந்நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை முகமாலை பகுதியில் துரித
கதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.