நாட்டில் தற்போது எல்போட் அரசாங்கம்: அநுரவை கேலி செய்த சாணக்கியன்
நாங்கள் வாகனம் ஓடுவதற்கு முன்னர் வாகனம் பழகும்போது எல்போர்ட் போட்டு கொண்டு தான் ஓடுவது வழக்கம். ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், எல்போட் போடாமலே இப்போது பழகிக் கொண்டிருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பெரியகல்லாறு மத்திய விளையாட்டு கழகத்தின் 18ஆவது ஆண்டு நிறைவு விழா பெரியகல்லாறு கலாசார மண்டபத்தில் நேற்று (16.02.2025) மாலை நடைபெற்றது.
இதன்போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த சாணக்கியன்,”களவு எடுத்து பணத்தை கொண்டு வர வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். ஆனாலும் எந்த ஒரு விடயத்தையும் இந்த எல்போர்ட் அரசாங்கம் பூர்த்தி செய்யவில்லை.
எமது பிரதேசங்களில் இருக்கும் சிறிய பிரச்சினைகளை கூட அரசாங்கம் தீர்த்து வைக்கவில்லை. அபிவிருத்திக்குழு கூட்டங்கள் நடைபெறுகின்றன, தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன, ஆனால் நடைமுறையில் எதுவும் நடைபெற்றதாக தெரியவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |