நேர்காணலில் ரணிலுக்கு பேச ஆலோசனை வழங்கியது அலி சப்ரியின் மகனா..! நாடாளுமன்றில் கொந்தளித்த சாணக்கியன்
வெளிவிவகார அமைச்சின் மகன்தானே அமைச்சருக்கு ஆலோசனை வழங்குகின்றார்.
அவர்தான் ஜனாதிபதிக்கு இந்த நேர்காணலுக்கு ஆலோசனை வழங்கினாரோ தெரியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (05.10.2023) நடைபெற்ற துறைமுக அதிகார சபை மற்றும் சிவில் விமான சேவைகள் தொடர்பான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அண்மையில் வெளிநாட்டு ஊடகம் ஒன்றின் நேர்காணலில் சனல் 4 சர்வதேச விசாரணை தொடர்பில் ஜனாதிபதி ரணில் சிறுபிள்ளைத்தனமான பதிலையே இந்த வழங்கியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
சனல் 4 வெளிப்படுத்தியுள்ள விடயங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை நிராகரிப்பதாக கூறி ஜனாதிபதி நாட்டுக்கு பெருமை சேர்க்கவில்லை. மாறாக சர்வதேச ரீதியில் நாட்டுக்கு அபகீர்த்தியையே ஏற்படுத்தியுள்ளார் என
பிரகீத் எக்னலிகொடவுக்கு என்ன நடந்தது?
அண்மையில் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கிய ஜனாதிபதி, எங்களை இரண்டாம் தர பிரஜைகளாக நினைக்கின்றீர்களா என்று கேட்டுள்ளார்.
அவர்கள் அப்படி நினைப்பதில் தவறில்லை. இங்கே இவ்வாறு நடந்தால் அப்படி நினைப்பார்கள். நீதிவான் நாட்டை விட்டு வெளியேறி செல்லும் போது அப்படி கேட்கலாம் தானே.
நீங்கள் இவ்வாறு செய்வதால் நடக்கும் வேலையே இது. பிரகீத் எக்னலிகொடவுக்கு என்ன நடந்தது என்று அசாத் மௌலான கூறுவதாக தெரிவிக்கின்றார். ஆனால் நீங்கள் சர்வதேச விசாரணையை நிராகரிக்கின்றீர்கள்.
நீங்கள் அவ்வாறு கூறி நாட்டுக்கு பெருமையை கொண்டு வரவரவில்லை. அபகீர்த்தியையே கொண்டு வந்துள்ளீர்கள் என தெரிவித்துள்ளார்.

முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம் News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri
