ஷாருக்கானின் மகன் உட்பட்ட மூவரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
பொலிவூட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உட்பட்ட 3 பேரை நாளை வரை காவலில் வைத்து விசாரிக்க மும்பை போதைப்பொருள் தடுப்புப்பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
கோவா நகர் நோக்கிச் சென்ற சொகுசு கப்பலில் நடந்த உல்லாச விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உள்ளிட்டோரிடம், மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.
சுமார் 20 மணிநேர விசாரணைக்குப் பின் ஆர்யன்கான் உட்பட மூவரை மும்பை காவல்துறையினர் இன்று கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போதே அவர்களைத் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.