ஜேர்மனியில் இந்தியர்களுக்கான முக்கிய வாய்ப்பு
ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜேர்மனி, தற்போது சந்தித்து வரும் மிக மோசமான தொழிலாளர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க இந்தியாவிலிருந்து அதிகப்படியான பணியாளர்களை ஈர்க்கத் திட்டமிட்டுள்ளது.
ஜேர்மனியில் தற்போது தகவல் தொழில்நுட்பம் (IT), பொறியியல், மருத்துவம் மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுமார் 4 இலட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
டிஜிட்டல் விசா முறை
இந்தத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய, இந்தியத் திறமையாளர்களை முன்னுரிமை அடிப்படையில் பணியமர்த்த அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதற்காக, இந்தியப் பணியாளர்களுக்கான விசா நடைமுறைகளை எளிதாக்கவும், மொழிக் கற்றல் மற்றும் கலாசார ஒருங்கிணைப்புக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் ஜேர்மனி முன்வந்துள்ளது.
குறிப்பாக, ‘டிஜிட்டல் விசா’ முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் விண்ணப்பச் செயல்முறையை விரைவுபடுத்த ஜேர்மனி திட்டமிட்டுள்ளது.
ஜேர்மனியின் முடிவு,
ஜேர்மனியின் இந்த முடிவு, வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கவர்வதில் நிலவும் சர்வதேசப் போட்டியில் இந்தியா ஒரு மிக முக்கியமான கூட்டாளியாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது.

ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் மற்றும் மென்பொருள் பொறியாளர்கள் ஜேர்மனியில் பணிபுரிந்து வரும் நிலையில், இந்தப் புதிய திட்டமானது இந்திய இளைஞர்களுக்கு ஐரோப்பாவில் சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெற ஒரு பொற்காலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேர்மனியின் பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்க இத்தகைய புலம்பெயர் தொழிலாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது என அந்நாட்டு அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன.
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri