நாட்டில் கடுமையான மருந்து தட்டுப்பாடு: இறக்குமதி செய்ய முடியாத நிலையில் அரசு
இலங்கையில் உள்ள வைத்தியசாலைகளில் கடுமையான மருந்துத் தட்டுப்பாடு நிலவுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
மேலும் மக்கள் தமது சகல விடயங்களுக்கும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாட்டுக்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதின் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.