நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் நீரில் மூழ்கி பலர் பலி!
நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போகமுவ தெதுரு ஓயாவில் நேற்று பிற்பகல் நீராடச் சென்ற ஒன்பது மற்றும் ஐந்து வயதுடைய இரண்டு ஆண் பிள்ளைகளும் அவர்களுடைய தாயும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
தற்போது அவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழப்பு சம்பவங்கள்
இதேவேளை மாரவில - குருசா தேவாலயத்திற்கு அருகில் கடலில் நீராடிக் கொண்டிருந்த இளைஞனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கல்பிட்டி இலுப்பத்தீவில் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த 65 வயதுடைய ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மேலும் இத்தேபான - மேல் கந்தயகிரல பிரதேசத்தில் உள்ள அதவெதுன்வெவ நீர் குளியலில் குளிப்பதற்கு சென்ற இரண்டு பொதுச் சுகாதார பரிசோதகர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

புடினை சந்திப்பதற்கு முன் பாதுகாப்பு உத்தரவாதத்தை கேட்கும் ஜெலென்ஸ்கி! இடம் இதுவாக இருக்கலாம் News Lankasri

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
