நேபாளத்தில் ஹீரோவாக மாறிய இலங்கை அரசியல்வாதி! உயிர்களை காப்பாற்றி தானும் தப்பிய செந்தில்
அண்மையில் நேபாளத்தில் நடந்த மக்கள் புரட்சி போராட்டங்களின் போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தெய்வாதீனமாக உயிர் தப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
செந்தில் தொண்டமான் தொழிற்சங்க மகாநாட்டிற்கு சென்றிருந்த வேலையில் அவர் தங்கியிருந்த ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளார்.
தீ விபத்தின் போது ஹோட்டலில் தங்கியிருந்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் செந்தில் தொண்டமான் ஈடுபட்டதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
அவரின் செயற்பாடு காரணமாக பலரின் உயிர் காப்பாற்றப்பட்டதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

செந்தில் தொண்டமானின் செயல்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, உயிர் தப்பிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சமூக ஊடகங்களில் தங்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த அரசாங்கத்தின் போது கிழக்கு மாகாண ஆளுநராக செயற்பட்ட செந்தில் தொண்டமான் செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேபாளத்தில் அவர் தங்கியிருந்தமை இதன்மூலம் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது! 22 மணி நேரம் முன்
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri