மூத்த பத்திரிகை ஆசிரியர் பாரதி இராஜநாயகம் பற்றிய நினைவு வணக்க கூட்டம்!
கொழும்பில் இருந்து வெளிவரும் வீரகேசரி - தினக்குரல் மற்றும் யாழ். ஈழநாடு பத்திரிகைகளின் மூத்த ஆசிரியர் பாரதி இராஜநாயகம் பற்றிய நினைவு வணக்க கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டம் நாளை (24.02.2025) மாலை 5.30 மணிக்கு வெள்ளவத்தையில் உள்ள கொழும்புத் தமிழ்ச் சங்க பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அத்துடன் வீரகேசரி நாளிதழ் - வார இதழ் பிரதம ஆசிரியர் எஸ்.ஸ்ரீகஜன் தலைமையில் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நினைவு வணக்க கூட்டம் இடம்பெறவுள்ளது.
தமிழ் இலக்கியத்துறை
இதன்போது, தமிழ் - சிங்கள பத்திரிகைகளின் மூத்த ஆசிரியர்கள், பிராந்திய செய்தியாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் இலக்கியத்துறையை சேர்ந்த பலரும் உரையாற்றவுள்ளனர்.
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான பாரதி, கொழும்பில் சிங்கள ஊடக அமைப்புகளுடன் இணைந்து 2000 ஆம் ஆண்டில் இருந்து 2017 ஆம் ஆண்டு வரை பணியாற்றியிருந்தார்.
அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ஈழநாடு நாளிதழின் பிரதம ஆசிரியராக ஒரு வருடம் கடமை புரிந்தார்.
35 ஆண்டுகளின் பின்னர் கொழும்பில் இருந்து மீண்டும் யாழ்ப்பாணம் சென்ற பாரதி, தனது சொந்த மண்ணில் மரணிக்கும் வரை வீரகேசரியின் வடபிராந்திய ஆசிரியராக பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 6 மணி நேரம் முன்

குக் வித் கோமாளி மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.. பொண்ணு யார் தெரியுமா Cineulagam

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
