இலங்கையில் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்படும் கட்டுப்பாடு..!
வெளிநாட்டிற்கு பணம் அனுப்ப இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு மேலும் நீடிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில மூலதன பரிவர்த்தனைகள் மற்றும் தொலைபேசி பரிமாற்றங்கள் ஆகிய வெளிநாட்டிற்கு பணம் அனுப்புவது குறித்து விதிக்கப்பட்டுள்ள தற்காலிக கட்டுப்பாடுகளை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தற்காலிக கட்டுப்பாடு
ஏப்ரல் 2020 முதல் மூலதனப் பரிவர்த்தனைகள் மற்றும் தொலைபேசி பரிமாற்றங்கள் தொடர்பான வெளிப்புற பணப் பரிமாற்றங்களை தற்காலிகமாக கட்டுப்படுத்துவதற்கான உத்தரவுகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வந்தன.
இது தொடர்பான கடைசி உத்தரவு 2022 டிசம்பர் 22ஆம் திகதி 2017ஆம் ஆண்டின் 12ஆம் எண் சட்டத்தின் கீழ் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் வெளியிடப்பட்டது.

இந்த உத்தரவு ஜூன் 30ஆம் திகதியுடன் காலாவதியாவதாக தெரியவருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற அனுமதியைப் பெற்ற பின், இந்த உத்தரவை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam