தேர்தலில் மூலம் மக்களைக் கூறு போட நாங்கள் விரும்பவில்லை: செல்வின் இரேணியஸ்
இந்தத் தேர்தலிலே மக்களைக் கூறு போட நாங்கள் விரும்பவில்லை என பொது கட்டமைப்பின் உறுப்பினர் மரியாம்பிள்ளை செல்வின் இரேணியஸ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
ஜனாதிபதியாக வருகின்றவர் ஒரு நிலைப்பாட்டுடன் அனைவருடனும் பேச வேண்டும் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசுகிறார்கள்.
தேசிய அரசியல் பிரச்சினை
தென் இலங்கையிலுள்ள வேட்பாளர்கள் அனைவரும் ஒன்றுபட்டு தேசிய அரசியல் பிரச்சனை தொடர்பாக பேச வேண்டும் அவ்வாறு பேசுவதன் ஊடாகவே இனப்பிரச்சனைக்கான தீவினை பெற்றுக்கொள்ள முடியும்.
அனைவரும் ஒரு தரப்பாக ஒன்றிணைந்து பேசுவதன் ஊடாகவே தேசிய இனப் பிரச்சினையை தீர்க்க முடியும் அதுவே தற்போது தேவை யான ஒன்றாகவுள்ளது.
இம்முறை தமிழ் மக்கள் வாக்களிக்கும் போது கட்டாயமாக சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் ஏனைய தெளிவுகளுக்கு செல்ல வேண்டாம்.
நாம் அனைவரிடமும் கேட்கின்ற விடயம் தமிழ் மக்கள் ஒன்றுபட்ட சக்தியாக திரள்வதற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்
எனவே இவ்விடத்தில் பொது வேட்பாளர் சங்குச்சின்னத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் தடுமாறிக் கொண்டிருக்கும் மக்களை ஒரணியாக கொண்டு செல்ல முடியும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |