அரியநேந்திரனுக்கு எவரும் வாக்களிக்கக் கூடாது! கஜேந்திரன் எம்.பி கோரிக்கை

Batticaloa Sri Lanka Selvarajah Kajendren
By Harrish Aug 22, 2024 06:26 AM GMT
Report

இந்தியா, இலங்கை அரசுகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும், தமிழர்களைத் தோற்கடிப்பதற்காகவுமே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக பா.அரியேத்திரன் களமிறங்கியுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இவரின் இந்த முடிவு தமிழீழத் தேசியத் தலைவருக்கும், 50 ஆயிரம் மாவீரர்களுக்கும், விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து இந்த மண்ணிலே வாழ்ந்து பேரினவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட 3 இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்களுக்கும் செய்யும் துரோகமாகவே மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கோரி நேற்று(21) மட்டக்களப்பு நகரில் துண்டுப்பிரசுரம் வழங்கிய வேளை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சஜித்துக்கு தலைவலியாகியுள்ள தலதா அத்துகோரளவின் விமர்சனம்!

சஜித்துக்கு தலைவலியாகியுள்ள தலதா அத்துகோரளவின் விமர்சனம்!

  

தமிழ் மக்களின் வாக்குகள்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பிரதான பெரும்பான்மை வேட்பாளர்கள் மூவரும் தமிழ் மக்களின் வாக்குகளைக் குறிவைத்து ஏமாற்று வார்த்தைகளைக் கூறி வருகின்றனர்.

இந்திய, மேற்கு நாடுகளுடைய பின்னணியுடன் கடந்த 15 வருடங்களாக ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டு அதற்குள்ளான 13 ஆவது திருத்தச் சட்டத்தைத் தீர்வாக வலியுறுத்தி வருகின்ற தரப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற போர்வையிலே தமிழர்களுடைய தேசிய அபிலாஷைகளைச் சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தப் போகின்றோம் என்ற ஒரு பேர்வையைப் போத்திக்கொண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியேத்திரனைத் தமிழ்ப் பொது வேட்பாளராக நிறுத்தியுள்ளன. 

இதனூடாக எங்களுடைய மக்களை ஏமாற்றி வாக்களிக்கச் செய்கின்ற உபாயத்தை அவர்கள் கையாண்டு வருகின்றனர்.

அரியநேந்திரனுக்கு எவரும் வாக்களிக்கக் கூடாது! கஜேந்திரன் எம்.பி கோரிக்கை | Selvarajah Kajendren Speech At Batticaloa

இலங்கையின் ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டால்தான் தமிழ் மக்களுக்கு எதிர்காலம் உண்டு.

எனவே, ஒரு பேரம் பேசுகின்ற வலிமைமிக்க சக்தியாக தமிழ் மக்களுடைய அரசியல் பலத்தை மாற்றுகின்ற முயற்சியிலே எமது கட்சித் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் எம்.பி. தலைமையிலான வழிநடத்தலிலே இந்த ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றோம்.

அரியநேந்திரனுக்கு எவரும் வாக்களிக்கக் கூடாது! கஜேந்திரன் எம்.பி கோரிக்கை | Selvarajah Kajendren Speech At Batticaloa

இலங்கைத் தீவில் சிங்கள பௌத்த பேரினவாத இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களின் எதிர்காலம் பாதுகாப்பானதாக மாற்றியமைக்கப்பட வேண்டுமாக இருந்தால் இந்த ஒற்றையாட்சி கட்டமைப்பு ஒழிக்கப்பட்டு சமஷ்டி கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். 

அதனூடாகத்தான் இந்தத் தீவிலே தமிழர்களும், முஸ்லிம்களும் பாதுகாப்பாக வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்க முடியும் என வடக்கு, கிழக்கில் வாழுகின்ற தமிழ், முஸ்லிம் மக்களிடம் வேண்டிக்கொள்கின்றோம்.

இந்தத் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற மாயைக்குள் சிக்கிக்கொள்ள வேண்டாம். அரியநேந்திரன், இலங்கையை ஒரு பௌத்த நாடாக ஏற்றுக்கொண்டு ஒற்றையாட்சியை ஆதரித்தவர். 

அரியநேந்திரனுக்கு எவரும் வாக்களிக்கக் கூடாது! கஜேந்திரன் எம்.பி கோரிக்கை | Selvarajah Kajendren Speech At Batticaloa

அவர் 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இலங்கையைச் சிங்கள பௌத்த நாடு என ஏற்றுக்கொண்டு 13 ஆவது திருத்தச் சட்டத்தைத் தீர்வாக ஏற்றுக்கொள்ள அவரது மறைந்த தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளிலும் உடந்தையாகச் செயற்பட்டவர். 

அவருக்கு எவரும் வாக்களிக்கக்கூடாது. எனவே, ஒட்டுமொத்த தமிழ், முஸ்லிம்களும் இந்த ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்து - பொறுப்பு தகவல்கள் இணையத்தில்

ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்து - பொறுப்பு தகவல்கள் இணையத்தில்


பெற்றோரை ஏமாற்றிய மாணவிகளுக்கு நேர்ந்த துயரம்

பெற்றோரை ஏமாற்றிய மாணவிகளுக்கு நேர்ந்த துயரம்

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US