வவுனியாவில் மதுபானசாலை நடத்தும் தமிழ் எம்.பி: சபையில் செல்வம் அடைக்கலநாதன் விளக்கம்
வவுனியாவில் தனக்கு சொந்தமாக மதுபானசாலை ஒன்று உள்ளது என தமிழ் எம்.பி ஒருவர் கூறியதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikkalanathan) இவ்வாறான விடயங்களுக்கு நான் ஒரு காலமும் அனுமதிக்க மாட்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய (21.08.2024) அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெருகியிருக்கும் கஞ்சா, ஹெரோயின், மற்றும் மதுபானசாலைகளால் இளைஞர்கள் தமது வாழக்கையை தொலைத்து வருகின்றனர்.
அண்மையில் போதைப்பொருள் பாவனையாளர்களை பொலிஸார் கைது செய்ததை நான் வரவேற்பதோடு இவ்வாறான இளைஞர்களின் வாழ்க்கையை கெடுக்கும் செயற்பாடுகள் முற்றாக அழிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam