தேர்தல் இருக்கின்றதா இல்லையா...! நாடாளுமன்றத்தில் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி (Video)
தேர்தல் இருக்கின்றதா இல்லையா... எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றைய தினம் (10.03.2023) பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தலையில் கூடிய நாடாளுமன்றத்தில், உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான விவாதத்தில் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கேள்வியை முன்வைத்துள்ளார்.
மேலும், “ஜனாதிபதி கூறுகிறார் தற்போது தேர்தல் காலம் இல்லை என்று, தேர்தல் திணைக்களம் அறிவிக்கின்றது எதிர்வரும் 25ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என்று. ஆனால் இரண்டு தரப்புகளும் விவாதிக்கின்றார்கள், முடிவெடுக்கின்றார்கள் இல்லை.
எங்களுடைய வேட்பாளர்களும் மக்களும் மிக இக்கட்டான சூழலிலே இருந்து கொண்டிருக்கின்றனர் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இரண்டு பேரும் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
நீங்கள் எடுக்கின்ற முடிவை உடனடியாக அறிவியுங்கள்.தேர்தல் இருக்கிறதா இல்லையா... எங்களுடைய மக்கள் இந்த தேர்தலை எதிர்பார்த்து நடக்காது... நடக்காது... என்று நினைக்கின்றளவுக்கு இந்தத் தேர்தல் முறை போய்க்கொண்டிருக்கின்றது.
ஆனால் இந்த தேர்தல் நடைபெற வேண்டும் என்பதில் எங்களுக்கும் மாற்றுக் கருத்து இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
