மகிந்தவிடம் கூட உதவி கேட்ட ரணிலின் அதிர்ச்சியளிக்கும் நடவடிக்கை! சபையில் வெளிப்படுத்தப்பட்ட விடயம்
தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சிகள் ஒற்றுமையாக தீர்வு விடயத்தை கையாள வேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மாவட்ட அபிவிருத்திக்குழு ஒரு தோல்வி கண்ட முறைமை என பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற போது ஜனாதிபதி அதனை நடைமுறைப்படுத்தப் போவதாக ஒரு செய்தியை நாடாளுமன்றத்திலே எடுத்துக் கூறினார்கள்.
இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான முறையை தான் கையாளப்போவதாக கூறி, பலரிடம் அதற்கு உதவ முடியுமா என்றெல்லாம் கேட்டு இறுதியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவிடமும் கேட்டு அவரும் 13 பிளஸ் என்று சொல்கின்ற ஒரு வாய்ப்பை உருவாக்கி விட்டு ஏன் இதை ஜனாதிபதி சொன்னார் என்பது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.