எந்தவொரு மதத்தையும் இழிவுபடுத்த அனுமதியில்லை! விதுர விக்ரமநாயக்க
எந்தவொரு மதத்தையும் இழிவுபடுத்துவதற்கு அனுமதியளிக்கப்படாது என பௌத்த சாசன, மத விவகாரங்கள் மற்றும் கலாச்சார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜெரோம் பெர்னாண்டோ என்ற மத போதகர் அண்மையில் பௌத்த மதத்தையும், புத்தரையும் இழிவுபடுத்தும் வகையில் வெளியிட்டதாக கூறப்படும் கருத்து தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், எந்தவொரு மதத்தையும், தரக்குறைவாக பேசுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மத இழிவை அனுமதிப்பதில்லை
புத்தர் ஞானம் பெற்றுக் கொண்டு ஒளியை தேடியவர், யேசு கிறிஸ்துவே அந்த ஒளி எனவும் போதகர் ஜெரோம் தெரிவித்துள்ளார்.
புத்தரும் யேசுவையே தேடியதாக அவர் குறிப்பிட்டார். பௌத்தர்கள் அனைவருக்கும் யேசு கிறிஸ்து தேவை என தெரிவித்திருந்தார்.
இவ்வாறு மதத்தை இழிவுபடுத்த அனுமதிக்கப் போவதில்லை என அமைச்சர் விதுர தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்த பெண்களிடம் சகவாசம் வச்சிக்காதீங்க- நீங்க பிறந்த தேதி என்ன? Manithan

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam
