இலங்கைக்கு கடத்தவிருந்த கடல் அட்டைகள் பறிமுதல்

Srilanka Investigation Arrest Rameswaram
By Yathu Jul 13, 2021 04:01 PM GMT
Report

கடந்த ஆறு நாட்களில் இலங்கைக்குக் கடத்த இருந்த தடை செய்யப்பட்ட 3 ஆயிரம் கிலோ கடல் அட்டைகளைப் பறிமுதல் செய்த வனத்துறையினர் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் 24 லட்சம் மதிப்பிலான நாட்டுப் படகுகளும், கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய 7 குற்றவாளிகளையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இலங்கைக்கு அருகே ராமேஸ்வரம் உள்ளதால் மன்னார் வளைகுடா கடல் வழியாகத் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள், கடல் பல்லி, டால்பின் துடுப்பு உள்ளிட்டவை சமீப காலமாக அதிகளவு கடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்குக் கடல் அட்டைகள் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து மண்டபம் வனத்துறையினர் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது வேதாளை கடற்கரை நோக்கி வந்த நாட்டுப்படகு ஒன்று வனத்துறையினரைக் கண்டதும் கரைக்கு வராமல் மீண்டும் கடலுக்குள் சென்றுள்ளது.

இதனைக் கண்ட வனத்துறையினர், ரோந்து படகில் துரத்திச் சென்று முயல்தீவு அருகே வைத்துத் தப்பிச் சென்ற நாட்டுப்படகை மடக்கிப் பிடித்து சோதனை செய்ததில் படகில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து படகையும் அதிலிருந்த இருவரையும் கைது செய்து மண்டபம் வனத்துறை சோதனை சாவடிக்கு அழைத்து வந்துள்ளனர்.

விசாரணையில் வனத்துறையினரைக் கண்டதும் நாட்டுப்படகில் இருந்து 500 கிலோ உயிர் கடல் அட்டைகளைக் கடலில் போட்டு விட்டதாகவும், படகில் சுமார் 300 கிலோ கடல் அட்டைகள் மட்டுமே இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து வேதாளையை சேர்ந்த மீரான்கனி, முகமது நசீர் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க மண்டபம் வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சுமார் 8 லட்சம் மதிப்பிலான நாட்டுப்படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆறு நாட்களில் மண்டபம் வனத்துறையினரின் தீவிர நடவடிக்கையால் 3 ஆயிரம் கிலோ கடத்தல் கடல் அட்டைகள் மற்றும் 3 நாட்டுப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 7 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

GalleryGalleryGalleryGallery
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இருபாலை

08 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Le Bourget, France

11 Jun, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US