விகாராதிபதி கொலை - துபாயில் இருக்கும் யுவதியை கைது செய்ய நடவடிக்கை

Sri Lanka Police Attempted Murder Crime
By Murali Sep 17, 2022 02:08 AM GMT
Report

சீதுவ, வெட்டேவ ஸ்ரீ நந்தாராம விகாரையின் விகாராதிபதியின் கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் துபாயில் வசிக்கும் இஸ்லாமியர் ஒருவரையும், 23 வயதுடைய யுவதியையும் கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவியை பெற்றுக்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

துபாயில் உள்ள 23 வயதுடைய யுவதி விகாராதிபதியின் கொலைச் சம்பவத்தில் பிரதான சந்தேகநபர் என கூறப்படும் 19 வயதுடைய இளம் பிக்குவின் காதலி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விகாராதிபதி கொலை - துபாயில் இருக்கும் யுவதியை கைது செய்ய நடவடிக்கை | Seeduwa Temple Murder Dubai Girl

உண்டியல் முறை மூலம் அனுப்பப்பட்ட பணம்

விகாராதிபதியின் மரணத்தின் பின்னர் பெறப்பட்ட டிபெண்டர் ஜீப் மற்றும் வேகன்ஆர் ஆகிய வாகனங்களை விற்பனை செய்து பெறப்பட்ட இரண்டு கோடி ரூபா பணம் துபாயில் 23 வயதுடைய யுவதிக்கும் முஸ்லிம் நபருக்கும் உண்டியல் முறை மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தக் கொலையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 19 வயதுடைய சிவரதாரிய ஏகல சுமணசிறி என்பவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று முன்தினம் அதிகாலை 1.00 மணியளவில் சீதுவ பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி தனுஷ்க பண்டார உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விகாராதிபதி கொலை - துபாயில் இருக்கும் யுவதியை கைது செய்ய நடவடிக்கை | Seeduwa Temple Murder Dubai Girl

பேஸ்புக் மூலம் அறிமுகம் 

சந்தேகநபரான பிக்குவும், குறித்த யுவதியும் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆகியுள்ளதாகபொலிஸார் தெரிவித்துள்ளனர். பின்னர் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த இருவரும் இதுவரை ஒருவரையொருவர் சந்தித்ததே இல்லை, இணையம் மூலம் தங்கள் காதல் உறவைப் பேணி வந்துள்ளனர்.

விகாராதிபதியின் சொத்துக்கள் தொடர்பான அனைத்து விபரங்களையும் சந்தேகநபர் தனது காதலியிடம் கூறியுள்ளார். 23 வயதுடைய குறித்த யுவதி மினுவாங்கொட ஹீனாட்டியான பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும் அவர் அண்மையில் துபாய்க்கு வேலைக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


துபாயில் வசிக்கும் இஸ்லாமியர் ஒருவரின் கீழ் அவர் பணிபுரிந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விகாராதிபதியின் சொத்துக்கள் குறித்து அந்த யுவதி தனது எஜமானரான இஸ்லாமிய நபரிடம் கூறியுள்ளார். பின்னர், இருவரும் விகாராதிபதியை கொலை செய்துவிட்டு சொத்தைப் பெற திட்டமிட்டனர்.

இந்த கொலைக்காக குறித்த யுவதி தனது பெற்றோரை பயன்படுத்தியுள்ளார். 23 வயதுடைய பெண் விகாராதிபதியை கொலைசெய்து விட்டு அனைத்து சொத்துக்களையும் கைப்பற்றி துபாய்க்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தார்.

தலைமறைவான பெற்றோர்

எனினும், சந்தேகநபராக பிக்கு துபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்ட விகாராதிபதிக்கும் சந்தேகநபருக்கும் இடையில் சொத்து தொடர்பில் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விகாராதிபதி கொலை - துபாயில் இருக்கும் யுவதியை கைது செய்ய நடவடிக்கை | Seeduwa Temple Murder Dubai Girl

விகாராதிபதியை கொலை செய்ததாகக் கூறப்படும் துபாய் யுவதியின் பெற்றோர்கள் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்ய மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

சந்தேகத்திற்கு இடமான தம்பதிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் அவர்கள் குறித்த அனைத்து தகவல்களையும் விமான நிலையத்திற்கு வழங்க பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.  

6ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொழும்பு

10 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Stouffville, Canada

05 Dec, 2025
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வவுனியா, பூந்தோட்டம்

07 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
நன்றி நவிலல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Gevelsberg, Germany

04 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், ஜெனோவா, Italy

08 Dec, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, Markham, Canada

06 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, Mississauga, Canada

09 Dec, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US