கோட்டாபயவின் வீட்டிற்கு மீண்டும் பலத்த பாதுகாப்பு! விரைவில் நாடு திரும்புகிறார்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டிற்கு மீண்டும் பலத்த பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.
கோட்டாபயவின், மிரிஹான வீட்டுக்கு இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்படுகின்றது.
படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு
குறித்த வீட்டுக்கு ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட படையினரின் எண்ணிக்கையை விட, தற்போது அதிகளவான அதிரடிப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய நாடு திரும்புவதற்கு மேலும் இரண்டு வாரங்கள் செல்லக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோட்டபாய இன்றைய தினம் மீண்டும் நாடு திரும்புவதாக ஏற்கனவே கூறப்பட்டது. ஆனபோதும் அவர் இன்று நாடுதிரும்ப மாட்டார் என அறிவிக்கப்பட்டது.
பாதுகாப்பு தொடர்பில் காணப்படும் பிரச்சினைகளை ஆராய்வதற்காகவே இவ்வாறு காலம் தாமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கோட்டாபயவுக்கு ரணில் வழங்கிய தகவல்
புலனாய்வு பிரிவின் ஆலோசனைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் சென்று நாடு திரும்பிய பின்னரே, கோட்டாபய நாடு திரும்புவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதுகாப்பமைச்சரான தாம் இல்லாத நேரம், நாட்டிற்குள் வர வேண்டாமென ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan

முதன்முறையாக தனது மகளின் முகத்தை காட்டி போட்டோ வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா.. செம ஸ்டில்ஸ் Cineulagam
