அரசாங்க உத்தியோகத்தரின் கவிதை ஊடான முறைப்பாடு: அமைச்சின் செயலாளர் கவிதையால் முன்வைத்த பதில்
இலங்கையின் பொது நிர்வாக அமைச்சு, அரசாங்க பணியாளர்களுக்கு வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக அறிவித்து, வீட்டுத்தோட்டங்களில் ஈடுபடுவதற்கு அவர்களை ஊக்கப்படுத்துவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் எரிபொருள் நிலைமை மேம்பட்டதால், நிர்வாகம் முழுமையாக செயல்பட வேண்டும் என்று அரசாங்கம் விரும்பியதால், வெள்ளிக்கிழமை விடுமுறை திரும்பப் பெறப்பட்டது.
அரச பணியாளர்களின் இன்னல்கள்
இந்தநிலையில் ஒரு அரசாங்க பணியாளர், இந்த புதிய முடிவை பற்றி வெளிப்படையாக மகிழ்ச்சியடையவில்லை, தனது வீட்டுத் தோட்டத்தில் செடிகள் வளர ஆரம்பித்துவிட்டதாகவும், அதிக வாழ்க்கை செலவு காரணமாக வேலைக்கு செல்வது கடினமாக இருப்பதாகவும் ஒரு கவிதை எழுதியுள்ளார்.
கீழ்மட்ட அரசாங்க பணியாளர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் மூத்த அதிகாரிகளுக்கு தெரியவில்லை என்றும் அவர் தமது கவிதையில் வேதனை தெரிவித்திருந்தார்.
அமைச்சின் செயலாளரின் பதில்
அவரது கவிதையை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே பார்வையிட்டுள்ளதுடன், உடனே அவரும் தனது சொந்த கவிதை மூலம் குறித்த அரச பணியாளருக்கு பதிலளிக்க முடிவு செய்துள்ளார்.
அதில், போதிய மழை பெய்து பயிர்கள் நன்றாக வளரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், முறையிட்டவர் தனது திறமையைக் கருத்தில் கொண்டு பொருத்தமான வேலையைக் கண்டுபிடித்து ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வேலைக்கு வரலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்க பணியாளர்கள், தங்கள் வேலையில் இருந்து தற்காலிக விடுப்பு எடுப்பதற்கு
கொடுக்கப்பட்டுள்ள விருப்பத்தை அமைச்சின் செயலாளர் தமது கவிதையில்
சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
