சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்
சிரேஷ்ட சட்டத்தரணி அமரர் கௌரி சங்கரி தவராசாவின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு மட்டக்களப்பு உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தில் அண்மையில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுக்கான அனுசரணை கௌரி சங்கரி ஞாபகார்த்த அறக்கட்டளையின் தாபகர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசாவினால் வழங்கப்பட்டிருந்ததோடு ஐ.பி.சி தமிழ் நிறுவனர் கந்தையா பாஸ்கரன் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.
இதன்போது மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் ஆதரவற்றோருக்கான உலருணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஸ்ரீநேசன், பா.அரியநேத்திரன், முன்னாள் மட்டு மாநகர மேயர் ஈ.சரவணபவன், தமிழரசுக்கட்சி தேசிய இளைஞரணித் தலைவர் கவிஞர் சேயோன், ஓய்வு பெற்ற அரச சட்டவாதி திரு.ஸ்ரீஸ்கந்தராஜா,சட்டத்தரணி பிருந்தா சந்திரகேஸ், பதிப்பாளர் முஸ்டீன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

















