பாலியல் குற்றசாட்டில் கைதாகிய தனுஷ்க தொடர்பில் இரண்டாவது பிணை கோரிக்கை
அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க இரண்டாவது பிணை கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது பிணைக்கோரிக்கை
இலங்கை கிரிக்கட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரண்டாவது பிணைக்கோரிக்கை மனுவினை எதிர்வரும் 08ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக நிவ் சவுத்வேல்ஸ் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த 7 ஆம் திகதி சிட்னி நகர பெடரல் நீதிமன்றம் குணதிலக்கவுக்கு பிணை வழங்க மறுத்துள்ளதுடன் அவர் மீண்டும் நீதிமன்றத்தில் வீடியோ தொழிற்நுட்பம் ஊடாக முன்னிலைப்படுத்தப்பட்டார்.
மத்திய நிலையத்தில் தடுத்து வைப்பு

மேலும் தனுஷ்கவுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மீண்டும் மறுத்துள்ளது.
அதனை தொடர்ந்து தனுஷ்க குணதிலக்கவை சிட்னியிலுள்ள தடுப்புக் காவலுக்கான மத்திய நிலையத்தில் தடுத்துவைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 4 மணி நேரம் முன்
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri