சீனாவில் வூஹான் நகரில் இரத்த மாதிரிகளை ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் முடிவு
சீனாவில் கோவிட் உருவான வூஹான் நகரத்து குடிமக்களின் ரத்த மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்த விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனா முன்னெடுக்கும் இந்த முயற்சியில் வெளிநாட்டு நிபுணர்கள் அல்லது பொதுவான அமைப்புகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றின் உருவாக்கம் தொடர்பில் உலக நாடுகளில் இருந்து எழுந்த கடும் நெருக்கடியை அடுத்து, சீனா நடவடிக்கை எடுக்க முன்வந்தது. முதலில், உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த குழு ஒன்று சீனாவில் ஆய்வை முன்னெடுத்தது. ஆனால் அவர்களால் உறுதியான ஒரு முடிவுக்கு எட்ட முடியாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் சீனா முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையிலேயே, சீனா ரத்த மாதிரிகளை சோதனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. மட்டுமின்றி தங்கள் நாட்டு நிபுணர்களே இந்த ஆய்வை முன்னெடுப்பார்கள் எனவும் அறிவித்துள்ளது.
இது தொடர்பான மேலும் பல உலக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இப்படிக்கு உலகம் தொகுப்பு,