சூரிய கிரகணம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை
இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று நிகழவிருக்கிறது.மீண்டும் 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் திகதி தான் சூரிய கிரகணத்தை காணமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சூரிய கிரகணத்தை வெறுங்கண்ணால் பார்த்தால் பார்வை இழக்க நேரிடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சூரிய கிரகணம் நிகழும் நேரம்
ரஷ்யாவின் தெற்கு பகுதிகள், கஜகிஸ்தான், ஐரோப்பிய நாடுகள், வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆசியாவின் சில பகுதிகள் ஆகிய இடங்களிலிருந்து இந்த சூரிய கிரகணத்தை காணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில், 14:19 (IST)மணிக்கு ஆரம்பித்து, 18:32 (IST)மணிக்கு முடியும் என்றும், ரஷ்ய நாட்டின் மத்திய பகுதிகளில் சூரியனை 80 விழுக்காடு சந்திரன் மறைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் இந்திய நேரப்படி 5.14 மணிக்கு தொடங்கி 5.44 மணிக்கு மறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகளின் எச்சரிக்கை
மேலும், சூரியனை கிரகணத்தின் போதோ, சாதரணமாகவோ வெறுங்கண்களாலோ அல்லது தொலைநோக்கி அல்லது பைனாகுலர் மூலமாகவோ காணக்கூடாது. அப்படி செய்தால் கண் பார்வை இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை சூரிய ஒளியை ஒரு சிறிய துளையிட்ட அட்டை ஒட்டப்பட்ட கண்ணாடி மூலம் இருண்ட அறையில் பாய்ச்சி சூரியனின் பிம்பத்தையும், கிரகணத்தையும் காணலாம் என கூறப்பட்டுள்ளது. பூமியானது சூரியனைச் சுற்றிவரும் பாதையை உள்ளடக்கிய தளம் எக்லிப்டிக் தளம் என்றழைக்கப்படுகிறது.
நிலவு பூமியை மற்றொரு சிறிய நீள்வட்டப் பாதையில் சுற்றிவருகிறது. ஆனால், பூமி சூரியனை சுற்றிவரும் தளத்தில் நிலவு பூமியைச் சுற்றுவதில்லை.
எனவே, ஒவ்வொரு சுற்றின்போதும் நிலவு எக்லிப்டிக் தளத்தை இருமுறை சந்திக்கும். சில நேரங்களில் பூமியையும் சூரியனையும் இணைக்கும் கற்பனையான நேர் கோட்டில் நிலவு எக்லிப்டிக் தளத்தைக் கடக்கும்போது சூரிய கிரகணம் நிகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.


இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
