பாடசாலை போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் வாகனங்கள் திடீர் பரிசோதனை...
திஸ்ஸமஹாராம பகுதியில் பாடசாலை மாணவர் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் வாகனங்களை பொலிஸார் திடீர் பரிசோதனை செய்துள்ளனர்.
அப்போது அவற்றில் அதிகமாக வேன்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. இந்த பரிசோதனையின் போது, 23 பஸ்கள் மற்றும் மூன்று வேன்கள் வீதியில் பயணிப்பதற்கு தகுதியற்றவை எனக் கருதப்பட்டதால், அவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்தனர்.
பயன்படுத்த முடியாத வாகனங்கள்
பாடசாலை மாணவர் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து வாகனங்களும் டெபரவெவ ஜனாதிபதி கல்லூரியின் முன் கொண்டு வரப்பட்டு வாகன ஆய்வாளர்களின் பங்கேற்புடன் பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது, 29 வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் 26 வாகனங்கள் வீதியில் பயணிப்பதற்கு தகுதியற்றவை என்று கண்டறியப்பட்டது.

தேவையான பழுதுபார்ப்புகள் முடிக்கப்பட்டு, மீண்டும் பரிசோதிக்கப்பட்டு, வாகன ஆய்வாளரால் வீதியில் பயணிப்பதற்கு ஏற்றது என சான்றளிக்கப்பட்ட பின்னரே வாகனங்கள் மீண்டும் இயக்க அனுமதிக்கப்படும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan