பிரபல பாடசாலையில் சகமாணவர்களின் தாக்குதலினால் சுயநினைவை இழந்த மாணவன்
களுத்துறை பாடசாலையொன்றில் உயர்தர வகுப்பில் சேர்க்கப்பட்ட சக மாணவனை கொடூரமாக தாக்கி துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் 17 வயதுடைய மூன்று மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை பாடசாலையொன்றில் உயர்தரத்தில் மூன்று மாணவர்களும் கல்வி பயின்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மாணவன் வழங்கிய வாக்குமூலம்
குறித்த பாடசாலையில் க.பொ.த. உயர்தர வகுப்பில் புதிதாக சேர்ந்த மாணவனை ஏனைய மாணவர்கள் துன்புறுத்தி தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் நெற்றியில் காயம் ஏற்பட்டதன் காரணமாக தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும், 24 மணித்தியாலங்களுக்கு மேலாக அவர் சுயநினைவு இல்லாமல் இருந்ததாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் மூவரும் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
வெண்ணிலா சொன்ன விஷயத்தை கேட்டு கடும் ஷாக்கில் கண்மணி, என்ன முடிவு எடுப்பார்.. அன்புடன் கண்மணி புரொமோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam