பிரபல பாடசாலையில் சகமாணவர்களின் தாக்குதலினால் சுயநினைவை இழந்த மாணவன்
களுத்துறை பாடசாலையொன்றில் உயர்தர வகுப்பில் சேர்க்கப்பட்ட சக மாணவனை கொடூரமாக தாக்கி துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் 17 வயதுடைய மூன்று மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை பாடசாலையொன்றில் உயர்தரத்தில் மூன்று மாணவர்களும் கல்வி பயின்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மாணவன் வழங்கிய வாக்குமூலம்
குறித்த பாடசாலையில் க.பொ.த. உயர்தர வகுப்பில் புதிதாக சேர்ந்த மாணவனை ஏனைய மாணவர்கள் துன்புறுத்தி தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் நெற்றியில் காயம் ஏற்பட்டதன் காரணமாக தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும், 24 மணித்தியாலங்களுக்கு மேலாக அவர் சுயநினைவு இல்லாமல் இருந்ததாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் மூவரும் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan