பாடசாலை மாணவனை கத்தியால் குத்திய சக மாணவன்! விசாரணையில் வெளியான காரணம்
கண்டி, அம்பிட்டியவில் உள்ள முன்னணிப் பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரை மற்றுமொரு மாணவர் கத்தியால் குத்தியதில் அவருக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த மாணவன் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
தரம் பதினொன்றில் கல்வி பயிலும் அம்பிட்டிய - உடுவெல பிரதேசத்தை சேர்ந்த இரு மாணவர்களே இவ்வாறு தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சந்தேகநபரான மாணவர் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் முன்விரோதம் காரணமாக கத்தியால் சக மாணவர் குத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்ததுள்ளது.