மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய பாடசாலை அதிபர் கைது!
இரத்தினபுரி இறக்குவானை பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் பயிலும் நான்கு மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள் உட்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் அந்த பாடசாலையின் அதிபரை இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
43 வயதான இந்த நபர் திருமணமாகாதவர் எனவும் இறக்குவானை பொலிஸார் கூறியுள்ளனர். இந்த நபரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் மாணவர்கள் 11 முதல் 13 வயதானவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சிறுவர்களின் நடத்தை காணப்பட்ட மாற்றம் காரணமாக பெற்றோர் அது குறித்து தேடிப்பார்த்த போது, இந்த சம்பவம் பற்றிய தகவல் தெரியவந்துள்ளதுடன் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த முறைப்பாட்டுக்கு அமைய பாடசாலை அதிபரை இறக்குவானை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக காவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.