இந்தியாவில் கோர விபத்து : தொடருந்து மோதியதில் 50 மீட்டர் இழுத்துச் செல்லப்பட்ட பாடசாலை பேருந்து
இந்தியாவின் கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே தொடருந்து கடவையை கடக்க முயன்ற பாடசாலை பேருந்து மீது தொடருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொடருந்து கடவையை கடக்க முயன்ற தனியார் பாடசாலைக்கு சொந்தமான பாடசாலை பேருந்தின் மீது திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த தொடருந்து மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை
தொடருந்து கடவையை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால் பேருந்து தண்டவாளத்தை கடந்த போது விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
#WATCH | Tamil Nadu | On a school bus crossing railway tracks hit by a train, Cuddalore SP SP Jayakumar says, "Two students dead, two students and the bus driver injured. The Railway Police, railway authorities and the State Police are conducting further investigation." https://t.co/bt7LAGRyKY pic.twitter.com/BVAOjJWKwb
— ANI (@ANI) July 8, 2025
விபத்தில் 2 பேர் உயிரிழந்ததாகவும், மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடருந்து மோதியதில் பாடசாலை பேருந்து 50 மீட்டர் தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செங்கடல் மற்றும் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் ஹவுதிகள்... குவித்து வைத்திருக்கும் ஆயுதங்கள் News Lankasri

12 ஆண்டுகளாக வேலையே செய்யாமல் ரூ.28 லட்சம் சம்பளம் வாங்கிய பொலிஸ்காரர்.., கண்டுபிடித்தது எப்படி? News Lankasri
