தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2026: பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
2026 ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் மீதான மேல்முறையீடுகளை ஏற்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை இன்று(07.09.2026) முதல் இடம்பெறும் என்றும் ஆணையாளர் நாயகம், ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களுக்கான வாய்ப்பு
இதற்கமைய, இன்று முதல் இந்த மாதம் 21 ஆம் திகதி வரை இதற்கான முறையீடுகளை செய்யலாம் என்றும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை முற்றிலும் இணையவழியில் செய்யப்பட வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பரீட்சை, மாணவர் பயிலும் பாடசாலையின் முதல்வர், பாடசாலைக்கு வழங்கப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி [https://onlineexams.gov.lk] என்ற இணையதளத்தில் உள்ள பாடசாலை உள்நுழைவில் (SCHOOL LOGIN) உள்நுழைந்து இந்த மேல்முறையீட்டுக் கோரிக்கைகளை சமர்பிக்க முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.