ஹோட்டல் மற்றும் வாடகை வீடுகளில் இடம்பெற்ற கடத்தல்! இரகசிய தகவலில் சிக்கிய இருவர்
ஹோட்டல் அறைகள் மற்றும் வீடுகளை வாடகைக்கு எடுத்து பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 140 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கையிருப்புடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல்
சந்தேக நபர்களிடமிருந்து 01 கிலோ 56 கிராம் கோகைன், 01 கிலோ. 212 கிராம் ஹெராயின் மற்றும் 04 கிலோ 116 கிராம் ஐஸ் போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது

கொழும்பு 6, வெள்ளவத்தை W.A.De சில்வா மாவத்தையில் வாடகைக்கு எடுக்கப்பட்ட சொகுசு வீட்டில் ஒருவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக இரகசிய தகவல் கிடைத்ததாக கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) தெரிவித்துள்ளது.
இதனையடுத்து குறித்த வீட்டை சோதனை செய்த போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும், சோதனையின் போது, அவரிடம் 116 கிராம் ஹெரோயினை கண்டுபிடிக்க முடிந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மண்சரிவு அபாயத்தால் இடம்பெயர்ந்தோர் வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி! எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்
சந்தேகநபர் கைது
சந்தேகநபரிடம் நீண்ட நேரம் நடத்திய விசாரணையில், அவரது மூத்த சகோதரர் கடவத்தை, தலுவப்பிட்டி, மிஹிந்து மாவத்தையில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும், அவர் போதைப்பொருள் வைத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த ஹோட்டலை சோதனை செய்து சந்தேகநபரை கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 11 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam