போதைப் பொருள் வர்த்தகரிடம் செய்மதி தொலைபேசி
கொதட்டுவை பிரதேசத்தில் போதைப் பொருள் வர்த்தகர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மூன்று செய்மதி தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொதட்டுவை, படஹேனலந்த வீதியைச் சேர்ந்த நபரொருவர் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த நபரின் வீட்டில் நேற்று பொலிசார் சோதனை மேற்கொண்டிருந்தனர்.
பணம் மற்றும் போதைப்பெருளும் மீட்பு
சந்தேக நபரிடமிருந்து 76கிராம் 330 மில்லி கிராம் எடை கொண்ட போதைப் பொருளுடன் மூன்று செய்மதித் தொலைபேசிகள், ஏழு இலட்சத்தி எண்பத்தி இரண்டாயிரம் ரூபா பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் சந்தைப் பெறுமதி பத்து இலட்சம் ரூபா என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நந்தகுமார் சிவானந்தன் அல்லது சிவா என்றழைக்கப்படும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 15 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
