ஏழரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய சஷீந்திர
புதிய இணைப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
சீனாவில் இருந்து தரமற்ற உரங்களை இறக்குமதி செய்ததால் அரசுக்கு நட்டம் ஏற்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று வியாழக்கிழமை காலை முன்னிலையாகியிருந்தார்.
அங்கு சஷீந்திர ராஜபக்ஷ ஏழரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இன்று (5) காலை வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
உர இறக்குமதி
உர இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கையை வழங்குவதற்காக அவர் அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக தகவல் - ராகேஷ்

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam
