விடுதலைப் புலிகளுக்கு தனித்த ஆட்சி! எந்நேரமும் தாக்குதல் நடத்தும் வளம் - ஞாபகப்படுத்தும் சரத் வீரசேகர
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும், ஜே.வி.பி. கலவரத்திற்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் உள்ளதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பு என்பது சர்வதேச அங்கீகாரமற்ற ஆயுத போராட்ட குழு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் விடுதலைப் புலிகளுக்கு தனித்த ஆட்சி, நிலம், நிர்வாக கட்டமைப்பு காணப்பட்டது. இலங்கை இராணுவத்தை எந்நேரமும் தாக்கும் கடல் மற்றும் வான் வழி தாக்குதலை நடத்தும் வளம் காணப்பட்டது.
ஆகவே விடுதலைப் புலிகள் அமைப்பை சர்வதேச அங்கீகாரமற்ற ஆயுத போராட்ட குழு என்ற நிலையில் வைத்துக் கொண்டே அரசாங்கம் செயற்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வர தலைமை தாங்கிய அரசியல்வாதிகள், இராணுவத்தளபதிகள் உட்பட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக ஒரு சில நாடுகள் பயணத்தடை விதித்துள்ளன. இது முற்றிலும் அநீதியானது.
புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்காக ஒரு சில நாடுகள் ஐ.நா சபையின் சாசனத்தையும் அடிப்படை கொள்கைகளையும் மீறியுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 4 மணி நேரம் முன்

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri

பார்த்தவுடன் வாயை பிளக்க வைத்த நடிகை மதுபாலாவின் மகள்கள்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? Manithan

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

போதைப் பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்படிபட்டவர்கள்... சீமான் பரபரப்பு பேச்சு Cineulagam
