விடுதலைப் புலிகளின் தலைவரை மரியாதையாக அழைத்த மகிந்த : பொன்சேகா தகவல்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை 'மஹதயா'(Sir) என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அழைத்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
2005ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மகிந்த சிந்தனையில், யுத்தம் எனது தீர்மானம் இல்லை என மகிந்த குறிப்பிட்டிருந்ததாக சரத் பொன்சேகா சுட்டிக்காயுள்ளார்.
மரியாதையாக அழைத்த மகிந்த
நான், பிரபாகரன் அவர்களை('மஹதயா') நேரடியாக சந்தித்து இது குறித்து கலந்துரையாடுவேன் என மகிந்த கூறியிருந்ததாகவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
உடனே, சரத் பொன்சேகாவிடம் கேள்வி கேட்ட தனியார் ஊடகவியலாளர், 'மஹதயா' என அழைத்தாரா என கேள்வியெழுப்பினார். அதற்கு, ஆம் என சரத் பொன்சேகா பதிலளித்தார்.
மஹதயா என்பது சிங்களத்தில் ஒருவரை மரியாதையாக அழைக்கும் சொல்லாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
