சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் 50 நாட்களுக்கு மூடப்படுகிறது
சப்புகஸ்கந்த எாிபொருள் சுத்திகரிப்பு நிலையம் இன்று முதல் 50 நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எனினும் எாிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுவதால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார்.
இது, இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனத்தை மாத்திரமே பாதிக்கும் உள்விவகாரம் என்பதன் காரணமாகவே, சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு முன்னர் விசேட அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்று அவா் குறிப்பிட்டாா்.
இது, இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனத்தை மாத்திரமே பாதிக்கும் ஒரு உள் விவகாரம் என்பதன் காரணமாக, நாட்டின் எரிபொருள் விநியோகத்தை பாதிக்காது என்றும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளாா்.