சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் ஆரம்பம்
சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் அதன் செயற்பாடுகளை நாளை முதல் ஆரம்பிக்கவுள்ளது.
மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இது குறித்து அவரது ட்விட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
Sapugaskanda Refinery will commence operations for first time since March 20th with a Crude Oil cargo unloading tomo. The refinery will start producing Fuel Oil in 6 days. Stocks on 26 May -
— Kanchana Wijesekera (@kanchana_wij) May 26, 2022
Diesel 23022 MT, Sup Diesel 2588 MT, 92 Pet 39968 MT, 95 Pet 7112 MT and JETA1 3578 MT
கடந்த மார்ச் மாதம் 20ம் திகதி அன்றைய மின்சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவினால் இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டது.
அதன் காரணமாக சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மட்டுமே வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதன் காரணமாக எரிபொருளுக்கு அநாவசியமாக அந்நிய செலாவணியை வீணாக்க வேண்டி ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது மசகு எண்ணெய் இறக்குமதி செய்து சுத்திகரிப்பதற்கு ஏதுவான வகையில் சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் செயற்படுத்த பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தற்போதைய நிலையில் 23022 மெட்ரிக் தொன் டீசல், 2588மெட்ரிக் தொன் சுப்பர் டீசல், 39968 மெட்ரிக் தொன் ஒக்டேன் 92 பெட்ரோல், ஒக்டேன் 95 பெட்ரோல் 7112 மெட்ரிக் தொன்னும் விமானங்களுக்கான எரிபொருள் 3578 மெட்ரிக் தொன்னும் கையிருப்பில் உள்ளதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.