சன்னாசி பரந்தன் ஆதிவிநாயகர் ஆலயத்தின் மகோற்சவம் ஆரம்பம்
வடக்கில் வவுனியா மாவட்டத்தின் புளியங்குளம் பிரதேசத்தில் சன்னாசி பரந்தன் ஆலயத்தில் வருடாந்த மகோற்சவம் நேற்று (29.08.2024) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 11 தினங்கள் திருவிழா நடைபெறவுள்ளது.
கொடியேற்றத்துடன் நேற்று காலை ஆரம்பமாகி 07.09.2024 சனிக்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தியுடன் 108 சங்காபிஷேகம் பால்குட பவனி என்பன இடம்பெற்று 08.09.2024 தீர்த்த உற்சவத்துடன் திருவிழாக்கள் நிறைவடையவுள்ளன.
சன்னாசி பரந்தன் ஆதிவிநாயகர் வராலாற்று பாடல் ஒன்றும் நேற்று வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளது. கலைஞர் செல்லக்குட்டி குறித்த பாடலை பாடியுள்ளார்.
பாடல்
பரணீதரன் சர்மா மற்றும் இசைக்கோன் கருணாகரன் இசையில் உருவான பாடலை செம்மலைச்செல்வன் வெளியிட்டுவைக்க ஆலய நிர்வாக தலைவர் அதனை பெற்றுக்கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |