அனுமதிப்பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் அகழ்வு: மூவர் கைது (PHOTOS)
அனுமதிப்பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட முன்று சந்தேகநபர்களை தருமபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இக்கைது நடவடிக்கை இன்று (18.10.2022) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மணல் அகழ்வு
புளியம் பொக்கணை மற்றும் தருமபுரம் பகுதியில் அனுமதிப்பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் அகழ்வில் ஈடுபடுவதாக தருமபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய தருமபுரம் பொலிஸார் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மூவர் கைது
இதன் போது மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மணல் அகழ்வுக்கு பயன்படுத்திய 02 டிப்பர்களும் மற்றும் உழவு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் கைப்பற்றப்பட்ட ரிப்பரகள், உழவு இயந்திரம் என்பன நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலைய தகவல்கள் வெளியாகியுள்ளன.




