சனத் ஜயசூரியவிற்கு வழங்கப்பட உள்ள முக்கிய பதவி
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சனத் ஜயசூரியவிற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகர் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சி ஆலோசகராக மஹல ஜயவர்தன கடமையாற்றும் அதேவேளை, மேலதிக ஆலோசகராக சனத் ஜயசூரிய கடமையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த முடிவு எடுக்கப்பட்டாலும், இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து வருவதாகவும், இறுதி இணக்கம் இன்னும் எட்டப்படவில்லை என்றும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக் குழுவின் தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டதுடன், புதிய உறுப்பினர்கள் தெரிவுக் குழுவிற்காக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 2 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri
