ஆட்கொலை படைப்பிரிவு தொடர்பில் புதிய தகவலை சபையில் அம்பலப்படுத்திய சாணக்கியன்(Video)

Parliament of Sri Lanka Dr Wijeyadasa Rajapakshe Pillayan Shanakiyan Rasamanickam
By Mayuri Sep 08, 2023 02:06 PM GMT
Report

ரிப்பொலி பிளட்ரூனில் இருந்த பத்து பத்து பேரை எடுத்து உருவாக்கப்பட்ட குழுவில், பிள்ளையானின் குழுவை சேர்ந்தவர்களும் இருந்ததாகவும், தீவுச்சேனை என்ற பகுதியிலேயே இதன் தலைமையகம் இருந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச உரையாற்றும் போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் தம்மிடமுள்ள சர்ச்சைக்குரிய குரல்பதிவுகள் உள்ளிட்ட சாட்சியங்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் சமர்ப்பிக்குமாறு சாணக்கியனுக்கு குறிப்பிட்டிருந்தார். 

இதற்கு பதிலளிக்கும் வகையில் உரையாற்றும் போதே சாணக்கியன் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.


சர்ச்சைக்குரிய குரல்பதிவுகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வழங்கவும்: சாணக்கியனிடம் நீதியமைச்சர்

சர்ச்சைக்குரிய குரல்பதிவுகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வழங்கவும்: சாணக்கியனிடம் நீதியமைச்சர்

ஆட்கொலை படைப்பிரிவு

அவர் மேலும் தெரிவிக்கையில், ஆட்கொலை படைப்பிரிவான ரிப்போலி பிளட்ரூனை எடுத்துக் கொண்டால், அது ஆரம்பித்தது இன்று நேற்று அல்ல. ரிப்போலி பிளட்ரூன் 2015ஆம் ஆண்டில் இருந்து செயற்பட்டு வருகின்றது. ரிப்போலி பிளட்ரூனில் காத்தான்குடியை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் பாயிஸ் என்பவர் இருந்தார்.

ஆட்கொலை படைப்பிரிவு தொடர்பில் புதிய தகவலை சபையில் அம்பலப்படுத்திய சாணக்கியன்(Video) | Sanakkiyan Speech At Parliament About Pillaiyan

ஏறாவூரை சேர்ந்த சமாட் என்பவர் இருந்தார். ஒட்டமாவடியை சேர்ந்த கலீல் என்பவர் இருந்தார். கலீல் என்ற நபர், பிள்ளையானுடன் இணைந்து, ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பாக பெயரிடப்பட்ட சந்தேகநபர். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு, அவர் கொலை செய்யப்பட்டார்.

ரிப்போலி பிளட்ரூன் ஊடாக காத்தான்குடி, மாத்திரமல்ல, மட்டக்களப்பில் பாரிய அளவில் மக்கள், தேவைக்கு ஏற்றவாறு கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட எந்தவொரு அறிக்கையும் ஜனாதிபதி ஆணைக்குழு வெளியிடவில்லை.

விடுதலைப் புலிகளின் தலைவரை விடுவிக்காததால் சனல் 4 எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டு

விடுதலைப் புலிகளின் தலைவரை விடுவிக்காததால் சனல் 4 எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டு

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ரிப்போலி பிளட்ரூன் தொடர்பாக தகவல் வழங்கிய சாட்சிகள் தற்போது வெளியில் உள்ளனர். நாட்டின் ஏனைய மாவட்டங்களில் குண்டுகள் வெடிக்காத போது, ஏன் மட்டக்களப்பில் குண்டுவெடித்தது என்ற கேள்வி எழுந்தது.

கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கு இந்த இஸ்லாமிய எதிர்ப்பு கடும்போக்குவாதி குழு தேவைப்பட்டது போன்று, 2015ஆம் ஆண்டு 10 ஆயிரம் வாக்குகளை கூட பெற முடியாத பிள்ளையானுக்கு, மீண்டும் வெற்றிபெறுவதற்கே மட்டக்களப்பும் குண்டுத் தாக்குதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஆட்கொலை படைப்பிரிவு தொடர்பில் புதிய தகவலை சபையில் அம்பலப்படுத்திய சாணக்கியன்(Video) | Sanakkiyan Speech At Parliament About Pillaiyan

ரோமன் கத்தோலிக்க தேவாலயம் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கான காரணம்

ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தை விடுத்து, சபைக்குரிய தேவாலயம் தாக்குதலுக்கு ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஏனெனில் சபைகளுக்குரிய தேவாலயத்தை சேர்ந்த பலர் மட்டக்களப்பில் இருக்கின்றனர். பிள்ளையான் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கும் சிறையில் இருந்து வெளிவருவதற்குமே மட்டக்களப்பை தெரிவு செய்து தாக்குதல் நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு சியோன் தேவாலயம் ஏன் தெரிவுசெய்யப்பட்டது? நாம் கூறும் விடயங்கள் தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டியது எம்மை அல்ல. குறிப்பிடும் விடயங்கள் குறித்து விசாரணை நடத்துங்கள். அரச புலனாய்வு பிரிவிலுள்ள புலனாய்வு குழுவினர் 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை ரிப்பொலி பிளட்ரூன் என்ற பெயரின் கீழ் இயங்கி வந்திருந்ததுடன், 2008ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தல் நிறைவடைந்த பின்னர், பாரிய கலவரமடைந்தனர்.

ஆட்கொலை படைப்பிரிவு தொடர்பில் புதிய தகவலை சபையில் அம்பலப்படுத்திய சாணக்கியன்(Video) | Sanakkiyan Speech At Parliament About Pillaiyan

ரிப்பொலி பிளட்ரூனில் இருந்த பத்து பத்து பேரை எடுத்து உருவாக்கப்பட்ட குழுவில், பிள்ளையானின் குழுவை சேர்ந்தவர்களும் இருந்தனர். தீவுச்சேனை என்ற பகுதியிலேயே இதன் தலைமையகம் இருந்தது. ரிப்பொலி பிளட்ரூனை சேர்ந்தவர்களின் ஒலிப்பதிவுகள் வெளியில் ஊடகங்களிடம் இருக்கின்றன.

லசந்த விக்ரமதுங்கவின் கொலை, எக்னலிகொடவின் கொலை, கீத் நோயர் தொடர்பாக, முன்னாள் போராசிரியர் தம்பையா, முன்னாள் விரிவுரையாளர் ரவீந்திரன் போன்றவர்களும் இலக்கானமை தொடர்பாக பாரிய அளவான தகவல்கள் உள்ளன. நீதி அமைச்சர் என்மீது குற்றஞ்சாட்டுவதை விடுத்து, இந்த தகவல்கள் குறித்து உரிய விசாரணையை நடத்த வேண்டும் என கோருகின்றேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.

கருணாவின் பின் பிள்ளையான் அரங்கேற்றிய கொலைகள்!! மிகப் பெரும் ஆதாரங்கள் சிக்கின

கருணாவின் பின் பிள்ளையான் அரங்கேற்றிய கொலைகள்!! மிகப் பெரும் ஆதாரங்கள் சிக்கின

 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US